28 May 2022

Samacheer Kalvi 6th Geography Term 2 Unit 1 Answers in Tamil

Samacheer Kalvi 6th Geography Term 2 Unit 1 Social Book Back Question and Answers:

Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 2 அலகு 1 – வளங்கள் Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 08 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science Geography Book Back Unit 1 Term 2 Answers PDF in Tamil:




Samacheer Kalvi 6th Social Geography Book Back Unit 1 Term 2 Answers/Solutions Guide PDF:

Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் – பருவம் 2

புவியியல் – அலகு 1 – வளங்கள்

அ) பொருத்துக

1. இயற்கை வளம் அ. கனிமங்கள்
2. பன்னாட்டு வளம் ஆ. நிலையான வளர்ச்சி
3. குகைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி இ. காற்று
4. புதிப்பிக்க இயலாது ஈ. உற்பத்தி செயல்
5. உலகளாவிய வளம் உ. திமிங்கலப் புனுகு
6. இரண்டாம் நிலை செயல்பாடுகள் ஊ. காடு
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஊ, 6 – ஈ

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கரும்பிலிருந்து ……… தயாரிக்கப்படுகிறது.
விடை: சர்க்கரை

2. வளங்களை ……….. கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
விடை: கவனமாக

3. குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ……… எனப்படுகிறது.
விடை: உள்ளூர் வளங்கள்

4. தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
விடை: கண்டறியப்பட்ட வளங்கள்

5. ………………. வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
விடை: பணமதிப்புள்ள

6. இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது.
விடை: முதல்நிலைச் செயல்பாடு

இ) சிறு குறிப்பு வரைக.

1. புதுபிக்கக் கூடிய வளங்கள்.
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி

2. மனித வளம்.
விடை:

  • இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

3. தனிநபர் வளம்.
விடை:

  • தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்.
  • எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள்.

4. மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
விடை:
உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை




ஈ) மிகச் சுருக்கமாக விடையளி.

1. வளங்கள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
  • எல்லா வளங்களுக்கும் மதிப்பு உண்டு.
  • எ.கா. : பெட்ரோலியம், காற்று

2. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
விடை:
தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவு அறியப்பட்டிருக்கிறதுமான வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் எனப்படும். எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.

3. உயிரற்ற வளங்களை வரையறு.
விடை:

  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
  • எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

4. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
விடை:

  • நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • வருங்கால தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைக்க வேண்டும்.
    இவ்வாறு சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.

உ) சுருக்கமான விடையளி.

1. உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக. உள்ளூர் வளங்கள்
விடை:
Samacheer kalvi 6th Social Science Term 2 Unit 1 Answers in Tamil

2. மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
விடை:
கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறன் ஆகியவை மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக உருவாக்குகிறது. எனவே மனிதனை நாம் தனி ஒரு வளமாக கருதுகின்றோம்.
எ.கா. : மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

3. நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் ஒப்பிடுக.
விடை:
நாட்டு வளங்கள் :
ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள். எ.கா. : இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்

பன்னாட்டு வளங்கள் :
எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் (இப்பகுதிக்கு உட்பட்ட வளங்களை உலக நாடுகளுக்கிடையேயான
ஒப்பந்தங்களின் மூலமாகவே பயன்படுத்த இயலும்). எ.கா. : திமிங்கலப் புனுகு

4. மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
விடை:
6th social science book back questions with answer

5. வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
விடை:

  • வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே.
  • உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனக் குற்றம் சாட்டும் மகாத்மா காந்தி வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுவதும், மனித தேவைகள் எல்லையை மீறுவதும் காரணங்களாக அமைகின்றன என்கிறார்.

ஊ) விரிவான விடையளி. (100 – 120 வார்த்தைகள் வரை)

1. இயற்கை வளங்களை வகைப்படுத்துக. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
விடை:
இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

I. தோற்றத்தின் அடிப்படையில்
– உயிரியல் வளங்கள்
– உயிரற்ற வளங்கள்

  • உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். எ.கா. : தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள்
  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

II. வளர்ச்சி நிலை அடிப்படையில்
– கண்டறியப்பட்ட வளங்கள்.
– மறைந்திருக்கும் வளங்கள்

  • கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
    எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
  • தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் உள்ளதுமான வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.
    எ.கா. : வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் காடிச்சத்து.

III. புதுப்பித்தலின் அடிப்படையில்
– புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
– புதுப்பிக்க இயலா வளங்கள்

  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படும்.எ.கா. : காற்று, நீர், சூரிய ஒளி
  • குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள்

2. வளங்களை பாதுகாப்பது எப்படி?
விடை:
வளங்களைப் பாதுகாத்தல் :

  • வளத்தினை கவனமாக கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது.
  • மக்கள் தொகையின் திடீர் பெருக்கத்தினால் வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. வளங்கள் குறைந்து வரும் வேகமும் அதிகரிக்கிறது.
  • இதைத் தவிர்த்திட நிலையான வளர்ச்சி அவசியம்.

நிலையான வளர்ச்சி நடைபெற:

  • வீணாக்குதலையும் அதிகப்படியான பயன்பாட்டினையும் தவிர்க்க வேண்டும்.
  • மறுபயன்பாடுள்ள வளங்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்.
  • மாசைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • வளங்களைப் பாதுகாக்க (3Rs) பின்பற்ற வேண்டும். அவைகள் குறைத்தல் (Reduce) மறுபயன்பாடு (Reuse) (Recycle)

3. வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
விடை:

  • வளத்திட்டமிடல் என்பது வளங்களை சரியாகப் பயன்படுத்தும் திறன் ஆகும்.
  • வளத்திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் வளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களை சரியாகப் பயன்படுத்தவும். வருங்கால தலைமுறைகளுக்கு சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
  • வளங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமல்ல. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகிறது.
  • வளங்களை அதிக சுரண்டலில் இருந்து தடுத்து பாதுகாக்க வளத்திட்டமிடுதல் அவசியம்.

4. முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
விடை:
முதல்நிலை செயல்பாடுகள் :

  • பழங்கால மனிதர்கள் தங்களின் தேவைக்கேற்ப பொருட்களை சேகரித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாத்தனர்.
  • மனிதன் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சில செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
  • இவ்வாறான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன்பிடித்தல், காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற அவனது செயல்பாடுகள் முதல் நிலை செயல்பாடுகளாக அமைந்தன.
  • பின்னர் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் பயிர் செய்து விவசாயத்தின் மூலம் தேவையை நிறைவு செய்தான்.
  • சுரங்கத்தொழில் இன்றைய நிலையிலும் முன்னிலை வகிக்கும் செயல்பாடாக உள்ளது.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகள்: இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருளாகக்
    கிடைக்கிறது. எ.கா. : கரும்பு → சர்க்கரை
  • மூலப்பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு ” இரண்டாம் நிலை செயல்பாடுகள்” எனப்படும்.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகளுக்கு மனிதத்திறனும் சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.

மூன்றாம் நிலை செயல்பாடுகள் :

  • உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
  • முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருட்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பாகும்.
    எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்பு

Other Important links for 6th Social Science Answers in Tamil:

Click Here to download complete 6th Social Science solutions Tamil Medium – Samacheer Kalvi 6th Social Science Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *