28 May 2022

Samacheer Kalvi 6th Civics Term 1 Unit 2 Answers in Tamil

Samacheer Kalvi 6th Civics Term 1 Unit 2 Book Back Questions and Answers in Tamil:

Samacheer Kalvi 6th Standard Social Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 6th New Syllabus Social Science Term I book back question & answer solutions guide available below for Tamil Medium. 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 2 – சமத்துவம் பெறுதல் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 6th Civics Term 1 Unit 2 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Civics பருவம் 1 அலகு 2 – சமத்துவம் பெறுதல் Book Back Questions with Answer PDF:

For all three-term of 6th standard Social Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Social Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 6th Social Science Civics Book Back Unit 2 Term 1 Solution Guide PDF:

TN Class 6th Social Science Civics Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் – பருவம் 1

குடிமையில் – அலகு 2 – சமத்துவம் பெறுதல்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
அ) சமூகமயமாக்கல்
ஆ) பொருளாதார நன்மைகள்
இ) அதிகாரத்துவ ஆளுமை
ஈ) புவியியல்

2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
அ) பாலின பாகுபாடு
ஆ) சாதி பாகுபாடு
இ) மத பாகுபாடு
ஈ) சமத்துவமின்மை

3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது
அ) திரைப்படங்கள்
ஆ) விளம்பரங்கள்
இ) தொலைக்காட்சி தொடர்கள்’
ஈ) இவை அனைத்தும்

4. ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்
அ) இந்தியா 2020
ஆ) அக்கினிச்சிறகுகள்
இ) எழுச்சி தீபங்கள்
ஈ) இவை அனைத்தும்

5. ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1997
ஆ) 1996
இ) 1995
ஈ) 1994

6. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
அ) 1985
ஆ) 1986
இ) 1987
ஈ) 1988

7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
அ) செஸ்
ஆ) மல்யுத்தம்
இ) கேரம்
ஈ) டென்னிஸ்

8. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறுகிறது?
அ) 14(1)
ஆ) 15 (1)
இ) 16 (1)
ஈ) 17 (1)

9. பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1990
ஆ) 1989
இ) 1988
ஈ) 1987

10. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) சேலம்
இ) கன்னியாகுமரி
ஈ) சிவகங்கை

II. பொருத்துக

1. பாரபட்சம் அ. தீண்டாமை ஒழிப்பு
2. ஒத்தக் கருத்து உருவாதல் ஆ. மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது
3. பாகுபாடு இ. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
4. பிரிவு 14 ஈ. தவறான பார்வை அல்லது தவறான கருத்து
5. பிரிவு 17 உ. பிறரை பற்றி எதிமறையாக மதிப்பிடுதல்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ




III. கோடிட்ட இடங்களை நிரப்புக :

1. ______ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
விடை: பாரபட்சம்

2. _____ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தார்.
விடை: 1931

3. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் _____
விடை: விஸ்வநாதன் ஆனந்த்

4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____.
விடை: டாக்டர் B.R. அம்பேத்கார்

5. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _____
விடை: தருமபுரி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

1. பாரபட்சம் என்றால் என்ன?
விடை:

  • பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவது ஆகும்.
  • அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறான முன் முடிவு எடுப்பதாகும்.
  • மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருக்கும் போது பாரபட்சம் ஏற்படுகிறது.

2. ஒத்தக் கருத்து என்றால் என்ன ?
விடை:

  • ஒத்தக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
  • (எ.கா) பெண்கள் விளையாட்டிற்கு உகந்தவர்கள் அல்ல என முன் முடிவு கொள்வது.
  • முன்முடிவு வலுவாக இருக்கும் போது ஒத்தக் கருத்து உருவாகிறது.

3. பாகுபாடு என்றால் என்ன?
விடை:

  • மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும்.
  • சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.

4. இந்திய அரசியலமைப்பின் படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு மற்றும் பிரிவு 15(1) ஆகியவை சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றன.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி.

1. பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.
விடை:
பாரபட்சம் உருவாவதற்கு பொதுவான சமூக காரணிகள்.

  • சமூகமயமாக்கல்
  • நிர்ணயிக்கப்பட்ட நடத்தை
  • பொருளாதார பயன்கள்
  • சர்வாதிகார ஆளுமை
  • இன மையக் கொள்கை
  • கட்டுப்பாடான குழு அமைப்பு
  • முரண்பாடுகள்

2. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
விடை:
சாதி பாகுபாடு

  • இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.
  • ஆரம்ப காலங்களில் சமுதாயம் என்பது தொழில் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்ததையே வர்ணாசிரமமுறை என அறியப்பட்டது.
  • இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஆவார்.
  • இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.

பாலினப் பாகுபாடு

  • பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
  • எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப்படிப்பை முடித்தபின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
  • அநேக பெண்கள் அவர்கள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப் படுவதில்லை.
  • இன்னும் சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் ஆண் பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர்.

3. இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.
விடை:

  • அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.
  • தற்போதைய பாலின பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
  • பாலின ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்காக பொது வாழ்வில் மற்றும் நிறுவனத்தில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.
  • மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.
  • வகுப்பறையில் குழுவாக சாப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்தவித பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றாக இணைக்கச்செய்தல்.
  • பல தரப்பட்ட மக்களிடமும் பேசுதல்.
  • சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.

Other Important links for Class 6th Book Back Answers:

Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF

For all three-term of 6th standard Social Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Social Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *