28 May 2022

Samacheer Kalvi 6th History Term 2 Unit 3 Answers in Tamil

Samacheer Kalvi 6th History Term 2 Unit 3 Social Book Back Question and Answers:

Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 2 அலகு 3 – குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 08 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science History Book Back Unit 3 Term 2 Answers PDF in Tamil:




Samacheer Kalvi 6th Social History Book Back Unit 3 Term 2 Answers/Solutions Guide PDF:

Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் – பருவம் 2

வரலாறு – அலகு 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அ) அங்கம்
ஆ) மகதம்
இ) கோசலம்
ஈ) வஜ்ஜி
விடை: ஆ) மகதம்

2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அ) அஜாதசத்ரு
ஆ) பிந்துசாரா
இ) பத்மநாப நந்தா
ஈ) பிரிகத்ரதா
விடை: அ) அஜாதசத்ரு

3. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அ) அர்த்த சாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) முத்ராராட்ஷம்
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனத்தும்

4. சந்திரகுப்த மௌரியர் அரியணையைத் துறந்து ……………. என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
அ) பத்ரபாகு
ஆ) ஸ்துலபாகு
இ) பார்ஸ்வ நாதா
ஈ) ரிஷபநாதா
விடை: அ) பத்ரபாகு

5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ………….
அ) டாலமி
ஆ) கொளடில்யர்
இ) ஜெர்சக்ஸ்
ஈ) மெகஸ்தனிஸ்
விடை: ஈ) மெகஸ்தனிஸ்.

6. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) பிரிகத்ரதா
ஈ) பிந்துசாரர்
விடை: இ) பிரிகத்ரதா

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக . சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம் : தர்மத்தின் கொள்கையின் படி அவர் ஆட்சி புரிந்தார்.
அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை: ஆ) கூற்றும் காரணமும் உண்மையான, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
விடை:
கூற்று 1 : ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.
கூற்று 2 : மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, 2 ஆகிய இரண்டும்
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
விடை:
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, மற்றும் 2
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை: இ) 1 மற்றும் 2

4. கீழ்க்காண்பனவற்றை காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
6th Social in Tamil
விடை:
இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மெளரியா

5. கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின.
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
அ) 1, 2 மற்றும் 3 மட்டும்
ஆ) 3 மற்றும் 4 மட்டும்
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்
ஈ) இவை அனைத்தும்
விடை: இ) 1, 2 மற்றும் 4 மட்டும்




III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ………….. மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
விடை: ராஜகிரகம்

2. முத்ரராட்சசத்தை எழுதியவர் ……………
விடை: விசாகதத்தர்

3. …………. பிந்துசாரரின் மகனாவார்.
விடை: அசோகர்

4. மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ………..
விடை: சந்திகுப்த மௌரியர்

5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ………….. பணியமர்த்தப்பட்டனர்.
விடை: தர்ம – மகா மாத்திரர்கள்

IV. சரியா? தவறா?

1. தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.
விடை: தவறு

2. அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.
விடை: தவறு

3. அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
விடை: சரி

4. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.
விடை: தவறு

5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விடை: சரி

V. பொருத்துக. கணா:

6th Social Science Answers in Tamil
விடை: அ) 3 4 1 2

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

1. மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும்.
விடை:

  • அர்த்த சாஸ்திரம்
  • முத்ராராட்க்ஷம்

2. ஸ்தூபி என்றால் என்ன?
விடை:

  • ஸ்தூபி என்பது அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பு. செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டது.
  • புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

3. மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ஹரியங்கா வம்சம்
  • சிசுநாக நம்சம்
  • நந்த வம்சம்
  • மௌரிய வம்சம்

4. மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?
விடை:

  • நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. நிலவரி (பாகா) மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.
  • கூடுதல் வருவாயாக காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அமைந்தன.

5. நகரங்களின் நிர்வாகத்தில் நகரிகா வுக்கு உதவியவர் யார்?
விடை:

  • ஸ்தானிகா
  • கோவா

6. அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?
விடை:
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மூவேந்தர்கள்

  • பாண்டியர்
  • சோழர்
  • கேரள புத்திரர் மற்றும் சத்திய புத்திரர்

7. மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக.
விடை:
மாமூலனாரின் அகநானுற்றுப்பாடல்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி:

1. பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்? (ஏதேனும் மூன்று)
விடை:

  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்றும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

2. மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.
விடை:

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்தது. வளம் மிகுந்த இப்பகுதி வேளாண் விளைச்சலை அதிகரித்தது, இது அரசுக்கு நிலையான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானத்திற்கு மரங்களையும் படைகளுக்கு யானைகளையும் வழங்கியது.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்:

1. கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?
விடை:

  • கி.மு 261ல் அசோகர் கலிங்கத்தின் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றார்.
  • 13வது பாறைக் கல்வெட்டில் அசோகரே கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரித்துள்ளார்.
  • அப்போருக்குப் பின் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்.
  • தர்மத்தின் கொள்கையை பரப்புவதற்காக சுற்றுப்பயணங்கள் (தர்மயாத்திரைகள்) மேற்கொண்டார்.
  • அவரது கொள்கை அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மனிதாபிமானத்தை உள்ளடக்கியது.
  • இரக்க உணர்வு, அறக்கொடை, தூய்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

2. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத்திட்டங்களை எழுதுக.
விடை:

  • அனைவருக்கும் இலவசக் கல்வி
  • இயலாதவர்களுக்கும், முதியோருக்கும், நோயாளிகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும் இலவச உணவு.
  • அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.
  • வீடற்றவர்களுக்கு இலவச தங்குமிடம்.
  • அனைவருக்கும் நீதி, பாலினம், மதம், சாதி பாகுபாடின்றி சமத்துவம்.

IX. படங்களைப் படிப்போம்.

இது அசோகருடைய பேராணைகள் பற்றிய படம்
அ) பேராணைகள் என்றால் என்ன?
ஆ) எவ்வகைகளில் அசோகரது பேராணைகள் பயன்படுகின்றன?
இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?
ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?
உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
விடை:
அ) பேராணைகள் என்பது அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஆகும்.
6th Social Solutions in Tamil
ஆ) அசோகர் அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்கள் நலன் மீது கொண்டிருந்த அக்கறையையும் தெரிந்துக் கொள்ள பேராணைகள் பயன்படுகின்றன.
இ) தூண்களிலும், பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் இப்பேராணைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஈ) பிராமி உ) 33 பாறைப் பேராணைகள் உள்ளன.

X. நான் யார்.

1. நான் ஹரியங்கா அரசவம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேசங்களை விரிவுபடுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன், நான் யார்?
விடை: பிம்பிசாரர்

2. சமூகத்தை மாற்றியமைத்ததில் நான் முக்கியப்பங்கு வகித்தேன். கலப்பைக் கொழுமுனை – செய்வதற்கு நான் பயன்படுகிறேன். நான் யார்?
விடை: இரும்பு

3. நான் தேவனாம்பிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன் நான் யார்?
விடை: அசோகர்

4. நான் இந்தியாவின் முதல் பேரரசை நிறுவினேன், நான் சல்லேகனா நோன்பிருந்தேன் நான் யார்?
விடை: சந்திரகுப்த மௌரியர்

5. அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் நான் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?
விடை: அசோக சக்கரம்

XI. அர்த்தப்படுத்தி விடையைக் கண்டுபிடி.

6th Social Book in Tamil

1. மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம் ………. (39, 30, 27, 6, 5)
விடை: ஹரியங்கா

2. ………… பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (26, 30, 27)
விடை: மௌரிய

3. …………… புதிய தலை நகரான பாடலிபுத்திரத்திற்கு அடித்தளமிட்டார். (2, 13, 27, 38)
விடை: உதயன்

4. …………….. ஒரு முக்கியமான ஏற்று மதிப்பொருள். (17, 36, 24, 11, 19, 22, 31, 34)
விடை: நறுமணப்பொருள்

5. பண்டைய மகத நாட்டில் இருந்த மடலாயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது. (18, 35, 16, 14)
விடை: நாளந்தா

6. நிலவரி …………… (20, 5)
விடை: பகா

7. கலிங்கப் போரின் பயங்கரம் …………. பொறிக்கப்பட்டுள்ளது. (21, 37, 3, 4, 32, 33, 9, 10)
விடை: பாறைக்கல்வெட்டு

8. கிரேக்கர்கள் பிந்துசாரரை ………. என்று அழைத்தனர். (1, 25, 28, 13, 4, 14)
விடை: 8அமிர்தகதா

9. சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது ………… (13, 28, 24, 7, 8, 3, 4, 29, 23)
விடை: தர்மச்சக்கரம்

10. அமைச்சரவை ………….. என அழைக்கப்பட்டது. (24, 16, 15, 30, 20, 30, 40, 12)
விடை: மந்திரிபரிஷத்

XII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது):

1. களப் பயணமாக அருங்காட்சியகம் செல்லுதல்.
2. அசோகர், சந்திர குப்தர் ஆகியவர்களோடு தொடர்புடைய திரைப்படங்களைக் காணுதல்.

XIV. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது):

1. அசோகச் சக்கரத்தின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
2. காஞ்சி ஸ்தூபியின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
3. நமது தேசக் கொடியின் படம் வரைந்து வர்ணம் தீட்டவும்.

XV. விடைக்கட்டம்:

6th Social Book Back in Tamil
விடை:
6th Social Science Tamil Medium

Other Important links for 6th Social Science Answers in Tamil:

Click Here to download complete 6th Social Science solutions Tamil Medium – Samacheer Kalvi 6th Social Science Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *