18 Jul 2022

Samacheer Kalvi 8th Social Civics Unit 3 in Tamil

8th Social Science Civics Unit 3 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 8 Social New Syllabus 2022 Civics Unit 3 – சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Social Science History Book Portion consists of  08 Units, Geography Book Portions Consists of 08 Units, Civics Book Portions Consists of 07 Units, Economics Units Consists of 02 Units.  Check Unit-wise and Full Class 8th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Civics Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 8th Social Science Book Back Questions with Answer PDF:




8th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 8th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Civics questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 03: சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Book Back Answers in Tamil

Civics (குடிமையியல்) – அலகு 03

சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. சமயச்சார்பின்மை என்பது
அ) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
ஆ) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.
இ) எந்தசமயத்தைச்சார்ந்தகுடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாகவாழ்தல்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணைக்கமாக வாழ்தல்

2. இந்தியா ஒரு ………….. கொண்ட நாடாகும்.
அ) பல்வேறு சமயநம்பிக்கை
ஆ) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்

3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
அ) 1951
ஆ) 1976
இ) 1974
ஈ) 1967
விடை:
ஆ) 1976

4. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
அ) அடிப்படை உரிமைகள்
ஆ) அடிப்படை கடமைகள்
இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
ஈ) அரசியலமைப்பின் முகவுரை
விடை:
ஈ) அரசியலமைப்பின் முகவுரை

5. சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது
அ) நீதித்துறை
ஆ) பாராளுமன்றம்
இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
ஈ) அடிப்படை உரிமைகள்
விடை:
ஈ) அடிப்படை உரிமைகள்

6. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
அ) சமய போதனைகள்
ஆ) நீதி நெறிக்கல்வி
இ) உடற்கல்வி
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவுமில்லை

7. ஒரு நாடு சமயச்சார்ப்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
அ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
ஆ) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடை செய்தால்
இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
ஈ) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
விடை:
இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. சமயம் நமக்கு ……………….. போதிக்கவில்லை .
விடை:
பகைமையை

2. சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது ………………… அளிக்கிறது.
விடை:
சமஉரிமை

3. …………….. என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.
விடை:
ஆத்திகம்

4. நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் ……………. மற்றும் …………. ஊக்குவிப்பதாகும்.
விடை:
தேசிய ஒற்றுமைமையயும், ஒருமைப்பாட்டையும்

5. பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் ………………….. காட்டுவதைத் தடை செய்கிறது.
விடை:
பாகுபாடு

III. பொருத்துக

8th social science book back questions with answer in tamil

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

1. இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.
விடை:
தவறு

2. சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.
விடை:
தவறு

3. மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையை பின்பற்றினார்.
விடை:
சரி

4. சமண சமயம் சீனாவில் தோன்றியது.
விடை:
தவறு

5. இந்திய அரசாங்கம் அனைத்து சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.
விடை:
சரி




V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை .
iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.

அ) i, ii மட்டும்
ஆ) ii, iii மட்டும்
இ) iv மட்டும்
ஈ) i, ii, iv மட்டும்
விடை:
ஈ) i, ii, iv மட்டும்

2. கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.

i) கூற்று சரி காரணம் தவறு
ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

3. கூற்று : இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.
காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்.

i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ii) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) இரண்டும் தவறு
விடை:
i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

4. தவறான இணையைத் தேர்க.
i) தீன் இலாகி – ஒரு புத்தகம்
ii) கஜுராஹோ – இந்து கோவில்
iii) அசோகர் – பாறைக் கல்வெட்டு
iv) இக்பால் – கவிஞர்
விடை:
i) தீன் இலாகி – ஒரு புத்தகம்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

1. சமயச்சார்பின்மையைப் பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
சமயச்சார்பின்மைப் பரவலில் பங்களித்த இந்தியர்கள் :

  • இராஜாராம் மோகன்ராய்
  • சர் சையது அகமதுகான்
  • இரவீந்திரநாத் தாகூர்
  • மகாத்மா காந்தி
  • B.R அம்பேத்கர்

2. சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?
விடை:
சமயச்சார்பின்மை
“பிற மதங்களின் மீது சகிப்புத்தன்மையான அணுகு முறை மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த குடிமக்களுடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு” சமயச்சார்பின்மை ஆகும்.

3. சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக.
விடை:
சமயச் சார்பின்மையின் நோக்கங்கள் :
ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு சமயக்குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.

ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது. – அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனிநபர்களின் சமய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.

4. அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
விடை:
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் சமயச்

சார்பின்மை என்பது அரசையும் மதத்தையும் தனித்தனியாக பிரிக்கும் கோட்பாடு ஆகும். பரந்த அளவில் கூறுவதென்றால் அரசானது சமய விவகாரங்களிலோ அல்லது சமயமானது அரசின் நடவடிக்கைகளிலோ தலையிடாது இருத்தல் ஆகும்.

ஒவ்வொரு குடிமகனும் தனது மனச்சாட்சியின்படி சுதந்திரமாக அவரது நம்பிக்கையை பரப்புதல், பின்பற்றுதல் மற்றும் சமயத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை வெளியிடுதல், மாற்றிக் கொள்ளுதல் அல்லது இல்லாமல் இருத்தல்.

5. சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?
விடை:
சமயச் சார்பற்ற நாட்டின் பண்புகள் :

  • சுதந்திரக் கோட்பாடு – (எந்தச் சமயத்தையும் பின்பற்ற அரசின் அனுமதி)
  • சமத்துவக் கோட்பாடு – (எந்த ஒரு சமயத்திற்கும் அரசு மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காமை)
  • நடுநிலைக் கோட்பாடு – (சமய விவகாரங்களில் அரசின் நடுநிலைமை)

6. சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
விடை:
சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் :

  • பிரிவு 15 – சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்தல்.
  • பிரிவு 27 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
  • பிரிவு 27 – எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தாமை.

VII. விரிவான விடையளி

1. சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
விடை:
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு தேவை.
ஏனெனில்

  • குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும், சக்திவாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்.
  • தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும்.
  • இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்
  • வாழ்க்கை குறித்த பரந்த பார்வையை அளிப்பதற்கும்
  • பிறரை பாராட்டுதல் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மன்பான்மையை வளர்ப்பதற்கும்.
  • அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்.
  • பொருள் முதல்வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.

2. இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச்சார்பின்மை அவசியம் – நிரூபிக்கவும்.
விடை:
இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச் சார்பின்மை அவசியம்.
ஏனெனில்

  • இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது மட்டுமின்றி சமய மேலாதிக்கத்தைக் தடுக்க பல்வேறு வழிகளில் செயலாற்றுகிறது.
  • ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையின் மிகச் சிறந்த பேறான சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க சமயச்சார்பின்மை உதவுகிறது.
  • சமயச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது.
  • சமயச் சார்பின்மை நாகரிகப்பண்புகள் வாழ அனுமதிக்கிறது.
  • மக்கள் பிற சமயத்தை மதிக்க வலியுறுத்துகிறது
  • சமயச் சார்பின்மை சமய நம்பிக்கையைப் பொறுத்தவரை சம உரிமையை வழங்குகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

1. சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடுமா?
விடை:
ஆம். சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடும்.

எந்த சமயமும், உயிருள்ள எந்தப் பொருளையும் கொல்ல போதிக்கவில்லை, இரக்கம் (கருணை) காட்டுதல் அனைத்து சமயங்களின் அடிப்படைப்பண்பு. நமது நாட்டின் சட்டம் கூட உயிர்களைக் கொல்லுதல் சட்டவிரோதம் என அறிக்கையிடுகிறது. மேலும் நரபலி மனித உரிமைகளுக்கு எதிரானது.

Other Important Links for 8th Social Science Book Back Answers Tamil Medium:

Click Here to download Samacheer Kalvi’s 8th Social Science Book Back Answers Tamil – 8th Social Science Book Back Answers Tamil Medium




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *