14 May 2022

Samacheer Kalvi 9th Tamil Unit 8.6

9th Tamil unit 8.6 – யாப்பிலக்கணம் Book Back Questions with Answers:

Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 9 New Tamil Book Back Answers Unit 8.6 – யாப்பிலக்கணம் Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Book – unit 8.6 யாப்பிலக்கணம் Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

9th Tamil Samacheer Kalvi Book Back Answers

Chapter 8.6 – யாப்பிலக்கணம்

கற்பவை கற்றபின்

1. உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்பாடு காண்க.
விடை:

குறள்

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து.
9th tamil book back questions with answer

குறிப்பு:

நெடில் எழுத்து வந்தால் தனியாகவும், குறிலுடன் மெய்யெழுத்து வந்தால் தனியாகவம், இரு
குறில் எழுத்துடன் மெய்யெழுத்து வந்தால் தனியாகவும் பிரிக்க வேண்டும். அல்லது இரு குறில் எழுத்தையும் தனியாகப் பிரிக்க வேண்டும். ஆய்த எழுத்தையும் மெய்யெழுத்தாகவே கணக்கிட வேண்டும். ( ) அடைப்புக் குறியிட்ட எழுத்தை அலகிடலில் சேர்க்கக் கூடாது.

மெய்யெழுத்தை நீக்கி ஓர் எழுத்து மட்டும் இருந்தால் நேரசை என்றும் மெய்யெழுத்தை நீக்கி இரண்டு எழுத்து இருந்தால் நிரையசை என்றும் கணக்கிட வேண்டும்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம் - 2

2. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம் - 10
விடை:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம் - 3
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம் - 4
இக்குறட்பாவானது மலர் என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது.

2. பின்வரும் பாடல்களில் பயின்றுவரும் தொடைநயங்களை எடுத்து எழுதுக.
விடை:
9th tamil book back questions with answer

இப்பாடலில் பயின்று வரும் தொடை நயங்கள் .

  • மோனை நயம்
  • எதுகை நயம்
  • இயைபுத் தொடை நயம்

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை எனப்படும்.
சான்று:

  • கொண்டல் – கொடிகள்
  • கண்ட – கனக
  • அண்டர் – அழகர்

செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகையாகும்.

சான்று:

  • கொண்டல் – கண்ட
  • விண்ட – அண்டர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம் - 9

சான்று:

  • அண்டையில் கூடும்
  • படி தர மூடும்
  • தண்டலை நாடும்
  • அனம் விளை யாடும்

இவ்வாறு இயைந்து வருவதால் இயைபு ஆகும். இப்பாடலில் மோனை, எதுகை, இயைபுத் தொடை ஆகிய நயங்கள் உள்ளன.

வினாக்கள்:

1. உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை நேர்நிரை அசைகளாகப் பிரித்துப் பார்க்க.
விடை:

  • மேகலா – மே/கலா – நேர் நிரை
  • குமரன் – கும/ரன் – நிரை நேர்
  • பிரியா – பிரி/யா – நிரை நேர்
  • அமிழ்தினி – அமிழ்/தினி – நிரை நிரை

2. மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் நான்கைக் குறிப்பிடுக.
விடை:

  • இரா / சரா / சன்
  • மணி / மா / றன்
  • மதி / மா / றன்
  • மணி / கண் | டன்

3. “தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்”
இக்குறட்பாவில் பயின்று வரும் மோனை, எதுகைகளைக் கண்டறிக.
விடை:

  • தம் பொருள் – தம் தம்} முதல் எழுத்து ஒன்றி மோனை பயின்று வருகிறது. (அடிமோனை)
  • தம் பொருள் – தம் தம் இரண்டாவது எழுத்து ஒன்றி எதுகையும் பயின்று வருகிறது.(அடி எதுகை)

4. தளையின் வகைகளை எழுதுக.
விடை:
தளையின் வகைகள் ஏழு ஆகும். அவை:

  • நேரொன்றாசிரியத் தளை
  • நிரையொன்றாசிரியத் தளை
  • இயற்சீர் வெண்டளை
  • வெண்சீர் வெண்டளை
  • கலித்தளை
  • ஒன்றிய வஞ்சித்தளை
  • ஒன்றாத வஞ்சித்தளை ஆகியவையாகும்.




மொழியை ஆள்வோம்

மொழி பெயர்க்க.

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,”You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”
விடை:
ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப் பார்த்தனர்.

அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும் இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

சொற்றொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

1. மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார் (நேர் கூற்றாக மாற்றுக).
Answer:
“நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்.

2. தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவை புகழ்கிறோம் என்று ஆசிரியர் கூறினார் (அயற் கூற்றாக மாற்றுக).
விடை:
தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்.

3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான் (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக)
விடை:
காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்).

4. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் (ஒலி மரபுப் பிழைகளை திருத்துக).
விடை:
அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.

5. கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளைத் திருத்துக).
விடை:
கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.

அஞ்சல் அட்டையில் எழுதுக.

வார இதழ் ஒன்றில் படித்த கவிதையைப் பாராட்டி அந்த ஆசிரியருக்கு அஞ்சல் அட்டையில் கடிதம்
எழுதுக.
விடை:
9th tamil book back questions with answer

நயம் பாராட்டுதல்.

திங்கள்முடி சூடுமலை
தென்றல் விளை யாடுமலை
தங்குமுகில் சூழுமலை
தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மை திரு
அருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதியமலை என்மலையே -குமரகுருபரர்
விடை:
முன்னுரை:
தமிழ் இலக்கியங்கள் உள்ளத்து இன்பத்தைப் பெருக்கும் ஆற்றல் படைத்தன அவை இயற்கையைப் போற்றுவதில் காலத்தைக் கடந்து முன் நிற்கின்றன. அந்த வகையில் பொதிய மலையைப் போற்றும் வண்ணம் அமைந்துள்ள குமரகுருபரரின் பாடலில் காணப்படும் இலக்கிய நயங்களை காண்போம்.

திரண்ட கருத்து:
நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை. எப்போதும் தென்றல் தவழ்ந்து விளையாடும் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை.
அங்கயற்கண்ணியாம் மீனாட்சி கண் திறந்து அருள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள் விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே.

மையக்கருத்து:
பொதிகை மலையின் இயற்கைப் பேரழகு, தமிழ் வளர்த்த மலை, அருவி சூழ்ந்த மலை மேகங்கள் தவழும் மலை எனப் பொதிகையின் அழகைக் குமரகுருபரர் மையமாக வைத்து இப்பாடலை இயற்றியுள்ளார். மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ, சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் எனப்படும்.

சான்று:
தங்கு முகில் – தமிழ் முனி
அங்கயற்கண்ணி – அருள் சுரந்து

எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:
திங்கள் – தங்கு
அங்கயற் – பொங்கருவி

அணி நயம்:
பொதிகை மலையில் விழும் அருவி “அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென்” என்னும் அடியில் உவமையணி அமைந்துள்ளது.

சந்தநயம்:
அறுசீர்ச் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று செப்பலோசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.

இயைபுத் தொடை:
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை.

சான்று:
சூடு மலை, யாடு மலை, வாழு மலை

முடிவுரை:
குமரகுருபரரின் இப்பாடல் இன்பம் தரும் இன்சுவையுடன் அமைந்து பொதிகை மலையின் புகழைப் பறைசாற்றுகிறது. இது போன்ற பாடல்களைப் படித்து இன்புறுவாமாக.

மொழியோடு விளையாடு

1. பொருத்தமான வாய்பாடுகளை வட்டமிடுக.
விடை:
9th tamil book back questions with answer

2. அகராதியில் காண்க.
விடை:
வயம் – வலிமை, வெற்றி, வேட்கை , பறவை, வசம், குதிரை, ஆடு, முயல்.
ஓதம் – ஈரம், வெள்ளம், கடல் அலை, ஒலி, பெருமை, வாதநோய்.
பொலிதல் – செழித்தல், பெருகுதல், மிகுதல், நீடுவாழ்தல், நிகழ்தல்.
துலக்கம் – விளக்கம், ஒளி, பளபளப்பு, மெருகு, தெளிவு.
நடலை – வஞ்சனை, துன்பம், பொய்மை, பாசாங்கு, அசைவு.

3. வினைத்தொகையை பொருத்தி எழுதுக.
விடை:
(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரை விளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர் பூ)

  • வளர்பிறை நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது.
  • தளிர்பூங்கொடிகளும், விளைநிலங்களும், மனதைக் கொள்ளையடிக்கின்றன.
  • நீள்வீதிகள் அனைத்தும் மூடுபனியில் மூழ்கிக் கிடக்கின்றன.
  • மெல்ல வீசும் குளிர்காற்றும் வளர்தமிழ் புகழ்பாடுகிறது.
  • தொலைவில் கலங்கரை விளக்கின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது.

பொருத்துக:

நேர்/நேர்/நிரை – கருவிளங்காய்
நிரை/நிரை/நேர் – கூவிளம்
நேர்/நிரை – தேமாங்காய்
நிரை/நிரை – தேமாங்கனி
நேர்/நேர்/நேர் – கருவிளம்
விடை:
நேர்/நேர்/நிரை – தேமாங்கனி
நிரை/நிரை/நேர் – கருவிளங்காய்
நேர்/நிரை – கூவிளம்
நிரை/நிரை – கருவிளம்
நேர்/நேர்/நேர் – தேமாங்காய்

4. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
விடை:
9th tamil book back questions with answer




‘கலைச்சொல் அறிவோம்

எழுத்துச் சீர்திருத்தம் – (Reforming the letters)
பெரியாரால் தமிழ்மொழியில் ஏற்படுத்தப்பட்டது.
எழுத்துரு – (font)
அச்சில் எழுத்துக்களின் வடிவமைப்பு அளவைக் குறிப்பது.

மெய்யியல் – (philosophy)
வாழ்வியல் உண்மைகளைத் தத்துவ இலக்கியமாக, கருத்துகளாக கூறுவது.

அசை – (syllable)
சொல்லைப் பிரித்தல் (சீர் பிரித்தல்).

இயைபுத்தொடை – (Rhyme)
செய்யுளில் அடிதோறும் இறுதிச் சொல் அல்லது எழுத்து ஒன்றி வருவது.

நிற்க அதற்குத்தக…

ஒரு நல்ல தோழியாக/தோழராக நண்பர்களுக்குச் செய்யவேண்டியது.
விடை:
அ) எழுதுபொருள்களை நண்பர்களுக்குக் கொடுத்து உதவுவது.
ஆ) விடுப்பு எடுத்த நண்பர்களுக்கு ஏடுகள் கொடுத்து உதவுதல், வகுப்பில் நடந்தவற்றைப் பகிர்தல்.
இ) நல்ல பண்புகளைப் பாராட்டி ஊக்குவித்தல்.
ஈ) குறைகளை நயமுடன், புண்படா வகையில் சுட்டிக்காட்டுதல்.
உ) இடர்வரும் வேளையில் இனிமையான, இதமான சொற்களால் தேற்றுதல்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
அ) நாள்
ஆ) மலர்
இ) காசு
ஈ) பிறப்பு
விடை:
ஈ) பிறப்பு

குறுவினா

1. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை:
அசை இரு வகைப்படும். அவை நேரசை, நிரையசை ஆகும்.

Other Important Link for 9th Tamil Book Back Solutions:

Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *