02 Jun 2022

Samacheer kalvi 7th Science Term 3 Unit 3 Answers in Tamil

Samacheer Kalvi 7th Science Term 3 Unit 3 Book Back Questions and Answers:

Samacheer Kalvi 7th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 7th New Syllabus Science Term III book back question & answer solutions guide available below for Tamil Medium. 7ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 3 அலகு 3 – பலபடி வேதியியல் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 7th Science Term 3 Unit 3 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard Science பருவம் 3 அலகு 3 – பலபடி வேதியியல் Book Back Questions with Answer PDF:

For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 7th Science Book Back அலகு 3 பருவம் 3 Solutions Guide PDF:

Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அறிவியல் – பருவம் 3

அலகு 3 – பலபடி வேதியியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ………….. ஆகும்.
அ) நைலான்
ஆ) பாலியஸ்டர்
இ) ரேயான்
ஈ) பஞ்சு

2. வலுவான இழை ……………………… ஆகும்.
அ) ரேயான்
ஆ) நைலான்
இ) அக்ரிலிக்
ஈ) பாலியஸ்டர்

3. ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை ……………….
அ) உருகும்
ஆ) எரிதல்
இ) ஒன்றும் ஏற்படுவதில்லை
ஈ) வெடித்தல்

4. கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை ……………. ஆகும்.
அ) நைலான்
ஆ) பாலியெஸ்டர்
இ) அக்ரிலிக்
ஈ) PVC

5. நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ………………….. என்ற பயன்பாட்டில் அறியலாம்.
அ) இரத்தப்பைகள்
ஆ) நெகிழிக் கருவிகள்
இ) நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
ஈ) நெகிழி கேரி பைகள்

6. ……………….. என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள்
அ) காகிதம் .
ஆ) நெகிழி புட்டி
இ) பருத்தி துணி
ஈ) கம்பளி

7. PET என்பது …………………….. இன் சுருக்கெழுத்தாகும்.
அ) பாலியெஸ்டர்
ஆ) பாலியெஸ்டர் மற்றும் டெரிலின்
இ) பாலி எத்திலின்டெரிப்தாலேட்
ஈ) பாலித்தின்டெரிலின்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ………………….. என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
விடை: PET

2. பல்வகை நெகிழிகளை இனம்காண ………… பயன்படுகின்றன.
விடை: ரெசின் குறியீடு

3. சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் …………… ஆகும்.
விடை: பலபடி

4. முழுமையான இயற்கை இழையின் எடுத்துக்காட்டு ……………… ஆகும்.
விடை: பருத்தி

5. கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை …………………… என்று பெயர்.
விடை: பட்டு

III. சரியா தவறா

1. அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன
விடை: சரி

2. மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும்.
விடை: சரி

3. செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்ததே.
விடை: தவறு – இயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்தது.

4. வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும்
விடை: சரி

5. பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்
விடை: சரி

IV. பொருத்துக.

1. நைலான் அ. வெப்பத்தால் இளகும் நெகிழி
2. PVC ஆ. வெப்பத்தால் இறுகும் நெகிழி
3. பேக்லைட் இ. இழை
4. டெஃப்லான் ஈ. மரக்கூழ்
5. ரேயான் உ. ஒட்டாத சமையல்கலன்கள்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ

V. சரியான வரிசையில் எழுதுக

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.
3. ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம். .
6. அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
விடை:
1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
3. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்து விடலாம்.
4. அந்த ஜெல்லினை அலுமினியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
5. ஒரு குவளை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
6. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணிநேரம் குளிர வைக்கவும்.

VI. ஒப்புமை தருக.

1. பருத்தி : இயற்கை : பாலியெஸ்டர் : ………………………
விடை: செயற்கை

2. PLA கரண்டி : மட்கும் தன்மை :: நெகிழி ஸ்பூன் : ……………………
விடை: மட்காத் தன்மை

3. நைலான் : வெப்பத்தால் உருகும் : பட்டு : …………………..
விடை: எரியும்

VII. வாக்கியம் மற்றும் காரணம்

1. வாக்கியம் : மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.
காரணம் : காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

2. வாக்கியம் : நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம் : நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

3. வாக்கியம் : நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம் : நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.




VIII. குறுக்கெழுத்து

இடமிருந்து வலம்
1. செயற்கை கம்பளியாகப் பயன்படும் இழை
2. நீர் பாட்டில்கள் உருவாக்கத் தேவைப்படும் நெகிழி

கீழிருந்து மேல்
3. குறை – செயற்கை இழையான இதற்கு செயற்கைப்பட்டு என்ற பெயரும் உண்டு
4. சிறிய ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சேர்க்கை உருவாக்கும் நீண்ட சங்கிலிப் பொருள்

மேலிருந்து கீழ்
5. கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகையான இயற்கை இழை.
6. பாலியெஸ்டர் என வகைப்படுத்தப்படும் ஓர் செயற்கை இழை
7. கயிறு தயாரிப்பில் பயன்படும் பலபடி
7th science book back question with answer in tamil
விடை:
1. அக்ரிலிக்
2. பாலி எத்திலின் டெரிப்தாலேட் (PET)
3. பாலிமர்
4. ரேயான்
5. பட்டு
6. அக்ரிலிக்
7. நைலான்

IX. மிகக் குறுகிய விடை தருக.

1. பருத்தியை உருவாக்கும் பலபடிகளின் இரசாயனப் பெயர் என்ன?
விடை:
செல்லுலோஸ்

2. நெகிழிபொருள்கள் வெவ்வேறு பண்புகளையும்குணங்களையும் எங்ஙனம் பெறுகின்றன
விடை:

  • குறைந்த எடை
  • அதிக வலிமை
  • சிக்கலான பல வடிவங்களை எடுக்கும் தன்மை
  • இளகும் தன்மை நீரினை உட்புகவிடாத தன்மை
  • புற ஊதாக் கதிர்களை உட்புக விடாத தன்மை

3. நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பது நல்லதல்ல, ஏன்?
விடை:

  • நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பதால் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களும் வேதிப் பொருட்களும் உருவாகின்றன.
  • இவை புற்றுநோய் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நோய்களை உருவாக்கும்.

4. நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வான துருப்பிடித்து விடுகிறது ஏன்?
விடை:

  • இரும்பு வாளி காற்றுடன் வினைபுரிவதால் துருப்பிடிக்கிறது.
  • ஆனால் நெகிழியினால் செய்த வாளியானது காற்றுடன் வினைபுரிவதில்லை, எனவே அது துருப்பிடிப்பதில்லை .

5. நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்?
விடை:

  • ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய நெகிழிகள் நமது சுற்றுப்புறத்திற்கும் விலங்குகளுக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் தீவிர தாக்கங்களையே ஏற்படுத்த வருகின்றன.
  • நெகிழி சிதைவடைவதும் இல்லை, மண்ணில் மட்குவதும் இல்லை.
  • ‘நெகிழி குப்பைகள் பல காலம் மறையாமல் இருப்பதால், எல்லா இடங்களிலும் நிறைந்து குவிந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
  • விலங்குகள் நெகிழிப்பைகளில் உள்ள உணவுடன் சேர்த்து நெகிழிப்பைகளையும் தவறுதலாக உண்பதால் அவற்றிற்கு கேடு விளைகிறது.
  • கடல் நீரில் குவியும் நெகிழிகள் சிறிய துண்டுகளாக மைக்ரோ நெகிழிகளாக உடைந்து கடலை மாசுபடுத்துகின்றன.
  • எனவே நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது சிறந்த முறையாகும்.

6. வெப்பத்தால் இறுகும் நெகிழிப் பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:

  • பேக்கலைட்
  • மெல்மின்

7. 5R கொள்கை என்பது என்ன?
விடை:

  1. 5R கொள்கை என்பது
  2. Refuse (தவிர்) – Reduce (குறை)
  3. Reuse (மீண்டும் பயன்படுத்து)
  4. Recycle (மறுசுழற்சி செய்)
  5. Recover (மீட்டெடு)

X. சிறுவினா

1. ‘மட்கும் தன்மை வாய்ந்தவை’ என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை:
இயற்கை செயல்முறைகளாலும், பாக்டீரியாக்களினாலும் சிதைவடையும் பொருள்கள் மட்கும் தன்மை வாய்ந்தவை எனப்படும்.

2. கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது அணிய ஏதுவான ஆடைவகை யாது? ஏன்?
விடை:

  1. கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது இயற்கை இழைகளாலான ஆடைவகைகளை அணிய வேண்டும்.
  2. ஏனெனில் இயற்கை இழைகள் அதிக அளவு நீரை உறிஞ்சுகின்றன.
  3. அதிக அளவு காற்றோட்டம் உள்ளதால் உடலை குளிர்ச்சியாகவும், சிரமமின்றியும் வைத்துக்கொள்ள இயற்கை இழைகள் உதவுகின்றன.

3. விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழியின் தாக்கம் என்ன?
விடை:
நெகிழிப் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை உண்ணும்போது விலங்குகள் தவறுதலாக நெகிழி பைகளையும் சேர்த்தே உண்கின்றன. இது விலங்குகளுக்கு கேடு விளைவிக்கின்றன.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன் பைகள் சுற்றுப்புறத்தை குப்பை கூடமாக்கி, வடிகால்களை அடைத்து மாசுபடுத்துகின்றன.

வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதால் நீர் தேங்கி நிற்கின்றது.

இது கொசுக்களின் இனப் பெருக்கத்திற்கு காரணமாகி மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற வியாதிகளை பரப்பி, வெள்ளம் ஏற்படவும் காரணமாகிறது.

XI. நெடுவினா

1. செயற்கை இழைகளின் பயன்களையும், வரம்புகளையும் பட்டியலிடுக.
விடை:
செயற்கை இழைகளின் சிறப்புகள் :

  • நிறம் மங்குவது இல்லை . ‘
  • சுருங்குவது இல்லை
  • அதிக வருடங்களுக்கு அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
  • அதிக வலிமை உடையது.
  • அதிக நீட்சித்தன்மை கொண்டது.

செயற்கை இழைகளான் குறைபாடுகள் :

  • வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை.
  • எளிதில் தீப்பற்றக் கூடியவை.
  • குறைந்த அளவே நீரை உறிஞ்சுகின்றன.
  • போதுமான காற்றோட்டத்தைத் தருவதில்லை. எனவே இவற்றை அணியும்போது வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம்.

2. நெகிழிப்பொருள்களை அகற்றும் பாதுகாப்பான முறைகள் சிலவற்றினை பரிந்துரைக்கவும்.
விடை:

  1. நெகிழிப் பொருள்களை அகற்றும் போது மட்கும் தன்மை கொண்டவை, மட்கும் தன் தன்மையற்றவை என பிரித்த பிறகு அப்புறப்படுத்துவது சிறந்தது.
  2. நெகிழிக் குப்பைகளை அகற்ற 5R – கொள்கையை முயற்சிக்க வேண்டும்.
  3. Refuse (தவிர்த்த ல்)
    கடைகளுக்குச் செல்லும்போது பருத்தியினாலான பை அல்லது சணல் பைகளை கொண்டு சென்று கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை தவிர்க்கலாம்.
  4. Reduce (குறைத்தல்)
    பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். நெகிழிப் பொருளை வாங்குமுன் அதற்கு பதிலிப் பொருள் உள்ளதா என சரிபார்த்தபின் வாங்கலாம்.
  5. Reuse (மீண்டும் பயன்படுத்துதல்)
    நெகிழியினால் செய்யப்பட்ட பொருள்களை தூக்கியெறியாமல் முடிந்த அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
  6. Recycle (மறுசுழற்சி செய்தல்)
    பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் பொருட்டு, ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் நெகிழிக் கழிவுகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யலாம்.
  7. Recover (மீட்டெடுத்தல், மட்குதல் மற்றும் எரித்துச் சாம்பலாக்குதல்)
    நெகிழிப் பொருள்களை சாம்பலாக்கிகளில் இட்டு உயர் வெப்பநிலையில் எரித்து வெளியாகும் வாயுக்களைக் கவனமாக சேகரித்தும், மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை கவனமாகப் பிரித்தும் மின்சார சக்தி பெறலாம்.
  8. அதிக இது பெரும்பாலும் நெகிழிக் கழிவுகளைக் கையாள்வதற்கு சாதகமான வழியாகக் கருதப்படுகிறது.

XII. உயர் சிந்தனைத் திறன் வினாக்கள்

1. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கியெறிப்படும் நெகிழிகளைத் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. அரசின் இந்தச் செயல்பாடு எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
விடை:

  • இதனால் சுற்றுச்சூழல், விலங்குகள், நமது ஆரோக்கியத்தின் மீது நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
  • நெகிழிகுப்பைகள் சேர்ந்து சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதும், நீர்நிலைகளில் அடைப்பு ஏற்படுவதும் குறைகிறது.
  • இதனால் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

2. நெகிழிப் பைகள் சிதைவடைய ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆகும் என நாம் அறிவோம். ஒரு தலைமுறை மாற 30 ஆண்டுகள் ஆகும். எனில், அந்த நெகிழிப்பை மட்குவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும்.
விடை:
அந்த நெகிழிப்பை மட்குவதற்கு 16 தலைமுறைகள் தேவைப்படும்.

XIII. பதில் எழுதுக.

1. நாம் பயன்படுத்தும் பொருள்கள் எது?
விடை:
நெகிழி பாட்டில்கள், தட்டுகள், டம்ளர்கள், கொள்கலன்கள், உடுத்தும் ஆடைகள்

2. இன்று காலை உங்கள் கைகளில் பட்ட முதல் நெகிழிப் பொருள் என்ன?
விடை:
பல் துலக்கும் பிரஷ்

3. உங்கள் வகுப்பறையை பார்வையிட்டு அதில் காணப்படும் நெகிழியால் ஆன பொருள்களைப் பட்டியலிடுக..
விடை:
நாற்காலி, பேனா, பென்சில் டப்பா, ஸ்கேல்

4. உங்கள் மதிய உணவை எடுத்துச் செல்வதற்கும், தண்ணீரை எடுத்துச் செல்வதற்கும் நீங்கள் பயன்படுத்தும் பொருள்களின் வகைகள் யாவை?
விடை:

  • மதிய உணவுக்கலன் – பாலி கார்பனேட் (PC)
  • தண்ணீரை எடுத்துச்செல்லும் பாட்டில் – பாலி கார்பனேட் (PC), PET.

5. உங்களிடம் உள்ள துணிகளின் வகைகளைப் பட்டியலிடுக.
விடை:
நைலான், பாலியெஸ்டர், பருத்தி, பட்டு

XIV. கோடிட்ட இடங்களை நிரப்புக.

i)
7th science book back questions with answer in tamil
விடை:
7th science book back questions with answer in tamil

ii) கொடுக்கப்பட்டுள்ள படத்தினை உற்றுநோக்கி என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள்.
7th science book back questions with answer in tamil
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியினாலான பாட்டில்கள், கேன்கள் வடிகாலை அடைத்து நீரை வடியவிடாமல் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது.
  • தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் பெருகி மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
  • கழிவு நீர் தேங்குவதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்குகிறது.

iii) கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து, அவற்றை வரைபடத்தில் குறிக்கவும், நாடுகளையும் அவை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் அளவையும் ஒப்பிடுக.
விடை:
7th science book back questions with answer in tamil

Other Important links for 7th Science Book Back Answers:

For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil

For Tamil Nadu State Board Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *