30 May 2022

Samacheer Kalvi 6th History Term 3 Unit 1 Answers in Tamil

Samacheer Kalvi 6th History Term 3 Unit 1 Social Book Back Question and Answers:

Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 3 அலகு 1 – பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 08 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science History Book Back Unit 1 Term 3 Answers PDF in Tamil:




Samacheer Kalvi 6th Social History Book Back Unit 1 Term 3 Answers/Solutions Guide PDF:

Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் – பருவம் 3

வரலாறு – அலகு 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ……
அ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) இளங்கோ அடிகள்
ஈ) முடத்திருமாறன்
விடை: ஆ) சேரன் செங்குட்டுவன்

2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
விடை: இ) பல்லவர்

3. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ……. ஆவர்.
அ) சாத வாகனர்கள்
ஆ) சோழர்கள்
இ) களப்பிரர்கள்
ஈ) பல்லவர்கள்
விடை: இ) களப்பிரர்கள்

4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ………
அ) மண்ட லம்
ஆ) நாடு
இ) ஊர்
ஈ) பட்டினம்
விடை: இ) வர்

5. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
அ) கொள்ளையடித்தல்
ஆ) ஆநிரை மேய்த்தல்
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
ஈ) வேளாண்மை
விடை: இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

II. கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்:

1. கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; காரணம் தவறு
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை
விடை: அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

2. கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
விடை:
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
அ. 1 மட்டும்
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
இ. 2 மட்டும்
விடை: ஆ. 1 மற்றும் 3 மட்டும்

3. பண்டைக்காலத்தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது.
அ. ஊர்<நாடு < கூற்றம் < மண்டலம்
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
இ. ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு
ஈ. நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை: ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்

4. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
6th Social Science Book Back Answers
விடை: அ) 3, 2, 1

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெண்ணி போரில் வெற்றி பெற்றது …………
விடை: கரிகால் வளவன்

2. சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ……….
விடை: தொல் காப்பியம்

3. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ……… கட்டினார்
விடை: கரிகாலன்

4. படைத்தலைவர் ………… என அழைக்கப்பட்டார்
விடை: தானைத்தலைவன் Question 5. நில வரி ……. என அழைக்கப்பட்டது விடை:
இறை




IV. சரியா /தவறா:

1. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்

விடை: தவறு

2. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.
விடை: தவறு

3. கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்
விடை: சரி

4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.
விடை: தவறு

5. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.
விடை: தவறு

V. பொருத்துக:

6th Social Book Back Answers
விடை:
அ. பாண்டியர்
ஆ. சேரர்
இ. சோழர்
ஈ) வேளிர்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. பண்டைக்காலத் தமிழகத்தின் வரலாற்றை மறு கட்டுமானம் செய்ய உதவும் இரு இலக்கிய சான்றுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தொல்காப்பியம்
  • எட்டுத் தொகை
  • பத்துப்பாட்டு

2. நடுகல் அல்லது வீரக்கல் என்றால் என்ன?
விடை:
பண்டைத் தமிழகத்தில் போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்ற நடப்பட்டவை நடுகற்கள் (வீரக்கற்கள்)

3. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • குறிஞ்சி – முல்லை மருதம்
  • நெய்தல் – பாலை

4. சங்க காலத்தோடு தொடர்புடைய இரு தொல்லியல் ஆய்விடங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அரிக்கமேடு
  • ஆதிச்ச நல்லூர்

5. கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பாரி
  • காரி
  • ஓரி
  • பேகன்
  • ஆய்
  • அதியமான்
  • நள்ளி

6. களப்பிரர் காலத்தைச் சேர்ந்த ஏதேனும் மூன்று தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை
  • யாப்பெருங்கலம்
  • பெரியபுராணம்

VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்:

1. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
விடை:

  • சங்ககாலப் பெண்கள் கற்றறிந்தவர்கள், அறிவுக் கூர்மையுடையவர்கள்
  • அரிய நூல்களைக் கொடுத்துச் சென்றுள்ள நாற்பது பெண் புலவர்கள் வாழ்ந்தனர்.
  • சொந்த விருப்பத்தைச் சார்ந்து திருமணம் அமைந்தது. கற்பு மிகச் சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது.
  • பெற்றோரின் சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் சமமான பங்கு உண்டு.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்:

1. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்படுகிறான். நிறுவுக.
விடை:

  • கரிகாலன் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப்படைகளை வெண்ணி போரில் தோற்கடித்தார். காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
  • வேளாண்மை மேம்பாட்டிற்காக காவிரியில் கல்லணை கட்டினார்.
  • புகார் துறைமுகம் மூலம் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பட்டினப்பாலை நூல் மூலம் தெரிகிறது. எனவே கரிகாலன் சோழர்களின் மிகச்சிறந்த அரசனாகக் கருதப்படுகிறான்.

2. களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரிய புராணம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கியச் சான்றுகள் களப்பிரர்கள் ஆட்சி குறித்தவை.
  • சீவகசிந்தாமணி, குண்டலகேசி, இரண்டும் களப்பிரர்கள் காலத்தவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டன. .
  • இக்காலத்தில்தான் சமணமும், பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன.
  • சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து முறை உருவானது.
  • வணிகமும் வர்த்தகமும் செழித்தோங்கின. எனவே களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல.

X. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது):

1. பல்வகை நிலப்பரப்புக் காட்சிப் படங்களைச் சேகரித்து, ஒட்டி, அவை எந்தத் திணைப் பகுதியைச் சேர்ந்தவை என்பதைக் கண்டுபிடிக்கவும். அங்கு விளையும் முக்கியப் பயிர்கள், வாழும் மக்களின் தொழில் ஆகியவை பற்றி எழுதவும்.

XI. கட்டக வினாக்கள்

6th Social Book Back Answers in Tamil
விடை:
6th Social Science Book Back in Tamil

Other Important links for 6th Social Science Answers in Tamil:

Click Here to download complete 6th Social Science solutions Tamil Medium – Samacheer Kalvi 6th Social Science Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *