Samacheer Kalvi 6th History Term 2 Unit 1 Social Book Back Question and Answers:
Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 2 அலகு 1 – வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 08 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and 6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science History Book Back Unit 1 Term 2 Answers PDF in Tamil:
Samacheer Kalvi 6th Social History Book Back Unit 1 Term 2 Answers/Solutions Guide PDF:
Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
சமூக அறிவியல் – பருவம் 2
வரலாறு – அலகு 1 – வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. ஆரியர்கள் முதலில் ………………… பகுதியில் குடியமர்ந்த னர்.
அ) பஞ்சாப்
ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
இ) காஷ்மீர்
ஈ) வடகிழக்கு
விடை: அ) பஞ்சாப்
2. ஆரியர்கள் ………… லிருந்து வந்தனர்.
அ) சீனா
ஆ) வடக்கு ஆசியா
இ) மத்திய ஆசியா
ஈ) ஐரோப்பா
விடை: இ) மத்திய ஆசியா
3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” …………. லிருந்து எடுக்கப்பட்டது.
அ) பிராமணா
ஆ) ஆரண்யகா
இ) வேதம்
ஈ) உபநிடதம்
விடை: ஈ) உபநிடதம்
4. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
அ) 1/3
ஆ) 1/6
இ) 1/8
ஈ) 19
விடை: ஆ) 1/6
II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கூற்று : வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகளும் கிடைத்துள்ளன. காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ; காரணம் சரி
விடை: ஈ) கூற்று தவறு; காரணம் சரி
2. கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிகப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்
கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
அ) கூற்று 1 தவறானது
ஆ) கூற்று 2 தவறானது
இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை.
விடை: இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை
3. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
அ) ஒரு விதவை மறுமணம் செய்து கொள்ளலாம்.
ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.
இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்
ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.
விடை: ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது
4. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
அ) கிராமா < குலா விஷ் < ராஸ்டிரா < ஜனா
ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
ஈ) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஸ்டிரா
விடை: ஆ) குலா < கிராமா விஷ் < ஜனா < ராஸ்டிரா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. வேதப்பண்பாடு ……………. இயல்பைக் கொண்டிருந்தது.
விடை: செம்புகால பண்பாடு
2. வேதகாலத்தில் மக்களிடமிருந்து ………… என்ற வரி வசூலிக்கப்பட்டது.
விடை: பாலி
3. ………… முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
விடை: குருகுலக்கல்வி
4. ஆதிச்சநல்லூர் ……………… மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விடை: தூத்துக்குடி
IV. சரியா? தவறா?:
1. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய – ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.
விடை: சரி
2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.
விடை: சரி
3. படைத்தளபதி கிராமணி’ என அழைக்கப்பட்டார்.
விடை: தவறு
4. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.
விடை: சரி
5. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
விடை: சரி
V. பொருத்துக.
விடை: 1 2 3 4
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.
1. நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- ரிக்
- யஜூர்
- சாம
- அதர்வ
2. வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?
விடை:
- யானைகள்
- பசு
- வெள்ளாடு
- செம்மறியாடு
- குதிரை
3. ‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.
4. ‘கற்திட்டைகள்’ என்பது என்ன?
விடை:
- கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம்
- இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும். அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.
5. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் முதுமக்கள் தாழிகள் ஆகும்.
6. வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:
- நிஷ்கா
- சத்மனா (தங்கம்)
- கிருஷ்ணாலா (வெள்ளி)
7. தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- முதுமக்கள் தாழிகள்
- கற்திட்டைகள்
- நினைவு கற்கள்
- நடுகற்கள்
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி:
1. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
விடை:
- கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
- பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணம் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது.
- தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- நூல் சுற்றும் சுழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள் குறிப்பாக சிவப்பு நிற மணிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவுக்கல் காணப்படுகிறது.
2. வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
விடை:
- ரிக் வேத காலத்தில் மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.
- பெண்கள் தனது கணவருடன் வீட்டில் சடங்குகள் நடத்தினர்.
- குழந்தைத் திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
- விதவை மறுமணத்திற்கு தடை இல்லை.
- சொத்துரிமையும், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.
- பின் வேதகாலத்தில் சடங்குகளை நடத்துதல், விதவை மறுமணம், கல்வி ஆகியன மறுக்கப்பட்டது. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.
VIII. உயர் சிந்தனை வினா
1. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:
- நவீன கால கல்வி முறையை ஒப்பீடு செய்யும் பொழுது குருகுலக் கல்வி முறை என்பது பழங்காலக் கற்றல் முறை.
- மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்து அதே வேளையில் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.
- வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர். அனைத்தையும் மனப்பாடம் செய்தனர்.
- நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறி முறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள்.
- இரு பிறப்பாளர்கள் மட்டுமே மாணவர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஒழுக்கமான வாழ்க்கைக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
IX. பெருமிதமும் மகிழ்ச்சியும் – உண்மைகளை நாம் கண்டறிவோம்.
விடை :
- இந்தோ – ரோமானிய வணிகத் தொடர்புக்கு சான்று.
- இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்று
- மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்ததற்கான சான்று
- நெசவுத் தொழில் நடைபெற்றதற்கான சான்று
X. மாணவர் செயல்பாடு:
1. புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குதல்.
சுருதி, கிராமணி, ராஷ்ட்ரா, இரும்புக்காலம் , நாடோடிகள், பண்டமாற்று
விடை:
- வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டவை சுருதி ஆகும்.
- கிராமத்திற்கு கிராமணி தலைவர் ஆவார்.
- பல ஜனாக்கள் இணைந்து ராஷ்ட்ரா உருவாயின.
- வட இந்தியாவின் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவின் இரும்புக்காலமும் சம காலத்தைச் சேர்ந்தவை.
- ரிக்வேத காலத்தில் பண்டமாற்று முறை பரவலாகக் காணப்பட்டது.
2. வார்த்தை விளையாட்டு
1. ஒரு கணவாய்
2. மத போதனைக் கொண்ட நூல்
3. கிராமங்களின் தொகுதி
4. இனக்குழு மன்றம்
5. மக்கள் மன்றம்
6. அக்னி
7. தங்க நாணயம்
8. வேதகாலம்
9. இறந்தவர்களை புதைத்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னம்.
விடை:
1. கைபர்
2. ஸ்மிருதி
3. விஸ்
4. கானா
5. சமிதி
6. நெருப்பு
7. தங்க நாணயம்
8. இரும்புக்காலம்
9. கற்திட்டை
XI. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)
ஆசிரியரின் உதவியோடு செய்தித் தாள்களிலிருந்து தொல்லியல் கண்டுபிடிப்புகள் குறித்த செய்தி – களைச் சேகரிக்கவும்.
கல்விச் சுற்றுலா
நீங்கள் இருக்கும் இடத்திற்கே அருகேயுள்ள தொல்லியல் சார்ந்த ஓர் இடத்திற்கு சென்று வரவும்.
XII. கட்டக வினாக்கள்:
விடை:
- இராமாயணம், மகாபாரதம் / நினைவுகற்கள் / கீழடி
- பையம்பள்ளி, பொருந்தல் /அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை/அயோத்தி, இந்திரப் பிரஸ்தம்
Other Important links for 6th Social Science Answers in Tamil:
Click Here to download complete 6th Social Science solutions Tamil Medium – Samacheer Kalvi 6th Social Science Answers